Sunday, June 24, 2012

மனித நேயம்!

இன்று தென்காசியில் இருந்து நெல்லைக்கு வந்து கொண்டிருந்தேன். பஸ்  பாவூர் சத்திரம் தாண்டி கொஞ்ச தூரம் வந்து இருக்கும். 


ஒரு பாட்டி திடீர் என்று " பணம் இல்லையே ...என்ன பண்ணுவேன்..." என்று பதறினார் 


டிரைவர் பஸ்சை நிறுத்தினார். " இறங்கிப் போய் அடுத்த பஸ்ஸில் வா" என்றார் கண்டகடர்.


அருகில் இருந்த பர்தா  அணிந்திருந்த அழகிய இளம்பெண் அவருக்காக ரூபாயை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார். கண்டக்டர்  அதனை வாங்குவதற்குள் பாட்டி "இதோ பணம் இருக்கு...சுருக்குப் பையில் வச்சதை மறந்துட்டேன்"

எல்லோரும் சிரித்தார்கள்!!



No comments:

Post a Comment