Wednesday, October 2, 2013

கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வரணும் ..

அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.CCE என்று அம்மா அறிமுகப் படுத்திய திட்டம் அவர்கள் நிம்மதியை நிர்மூலமாக்கி விட்டது.1-5 வகுப்புகளில் சரியாகப் படிக்காமல் 6 ஆம் வகுப்பு வரும் மாணவர்களுக்கு ABC ..கூட தெரியவில்லை.முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது.1-5 ஆசிரியர்கள் சங்கம் பலமாக இருப்பதால் அவர்களிடம் பேசவே முடியாது. இளிச்ச வாயர்கள் இந்த பட்டதாரிகள் தான். இவர்கள் சங்கமும் பலவீனமான சங்கமாக உள்ளது.பலர் வேலையை விட்டு விடும் முடிவில் உள்ளார்கள். சிலர் வெளி நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த அளவு மேல் அதிகாரிகள் அவர்களை சித்ரவதை செய்கிறார்கள். கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று அவர்கள் கடவுளை வேண்டுதல் செய்கிறார்கள்!!

No comments:

Post a Comment