Friday, June 6, 2014

பிரதமர் மோடி செய்ய வேண்டியது...

மோடி தலைமையில் இந்திய நாடு மா வல்லரசு ஆகும் என்றே தெரிகிறது! அதே போல கீழ் மட்டம் வரையிலும் மததிய அரசு நுட்பமான கவனம் செலுத்த வேண்டும். பட்டணங்களில் தெருக்களில் கால் வைக்க முடிய வில்லை, (திருப்பூர், சென்னை போன்ற) எங்கு நோக்கினும் எச்சில் குப்பை, நீக்கமற! பஸ் நிலைய கக்கூசுகளோ நினைக்கவே குமட்டுகிறது. நீண்ட தூர பிரயானங்களில் சாலையோர உணவகங்களோ அசுத்தத்தின் உச்சம்! வெளி நாட்டவர் இதனைப் பார்த்தல் என்ன நினைப்பார்கள்?! விளையாட்டு துறையிலும் புதிய மதிய அரசு தீவிர கவனம் செலுத்தி பாரதம் முதலிடம் பிடிக்க ஆவன செய்ய வேண்டும். எல்லா துறைகளிலும் வளர்ச்சி காண்பது அவசிய தேவை!! பொன். ராதா கிருஷ்ணன் போன்றோர் இது போன்ற விஷயங்களில் அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மதிய அரசும் மாநில (தேவை யானால்) அரசுகளை கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும்!! மோடி அரசுக்கு வாழ்த்துக்கள்!! பொதுவாக மக்களுக்கு மோடி மீது பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது!!

No comments:

Post a Comment