Sunday, March 25, 2012

தொலைந்து போதல்...

உறவினர் திருமணத்தில்
ஐந்து வயது மகன்,
தொலைந்து கிடைத்த
அரை மணி நேரத்தில்
உணர்ந்து கொண்டேன்...
இருபது வருடங்களுக்கு முன்
எட்டாம் வகுப்பில் தோல்வியுற்று
சென்னைக்கு
நான் ஓடிப் போனபோது
என் பெற்றோர்
அனுபவித்த வலியை!

2 comments: